நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதி விபத்து

1099பார்த்தது
நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதி விபத்து
திருச்சி இனாம்குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் லாசர் வயது 70 சம்பவம் நடந்த நேற்று ஆலம்பட்டிபுதூரா பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது இவருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தலையில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்த விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஒட்டியான வீரப்பூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து இனாம்குளத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி