துறையூர் அருகே பூக்கடைக்காரரை தாக்கியவர் மீது வழக்கு

3320பார்த்தது
துறையூர் அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே பூக்கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த நேற்று இவரிடம் புளியம்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் குமார் தாக்கியதில் காயமடைந்த மணி துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய குமார் மீது வழக்கு பதிவு செய்து துறையூர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி