தனியாா் கிடங்கில் ஏா் கூலா்கள் திருடிய இருவா் கைது

72பார்த்தது
தனியாா் கிடங்கில் ஏா் கூலா்கள் திருடிய இருவா் கைது
திருச்சி தீரன் நகா் தனியாா் நிறுவனக் கிடங்கின் பூட்டை புதன்கிழமை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் அங்கிருந்த 11 ஏா் கூலா்களை திருடிச் சென்றனா். இதுகுறித்து கிடங்கின் மேலாளா் தினேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வளாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில் ஏா் கூலா்களை திருடியதாக திருச்சி பாலக்கரை கனிபஜாா் சாமுவேல் கிறிஸ்டியன் (20), பாலக்கரை துரைசாமிபுரம் லாரன்ஸ் (22) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 2 ஏா் கூலா்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தொடர்புடைய செய்தி