திருவரம்பூர் தொகுதி நலத்திட்டப் பணிகள்துவக்கி வைத்த அமைச்சர்

69பார்த்தது
திருவெறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள
அசூர் ஊராட்சி பொய்கைக்குடி கட்டளைக் கால்வாய் படித்துறை, திருநெடுங்குளம் தேவராயநேரியில் பொதுக் கழிப்பிடம், குவளக்குடியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆகிய கட்டுமானங்களையும் பொய்கைக்குடி-வாழவந்தான்கோட்டை- பனையகுறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடைகள், திருநெடுங்குளம் சிவன் கோயில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் புதிய சிமெண்ட் சாலை ஆகிய முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்து வைத்தார்
இந்நிகழ்வில் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், ஸ்ரீதர்தலைமை செயற்குழு உறுப்பினர்
கே என் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி கங்காதரன் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ் ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி