துறையூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 53 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள் சுமார் 200 பேர் தங்கள் உற்பத்தி செய்த 855 குவிண்டால் பருத்தியை 2185 மூட்டைகளில் கட்டி துறையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பொது ஏலத்தில் விற்பதற்காக கொண்டு சென்றனர். பெரம்பலூர் கொங்கணாபுரம் பண்ருட்டி மகுடஞ்சாவடி கும்பகோணம் கரூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் 13 பேர் இடத்தில் கலந்து கொண்டனர்.
பருத்தி குறைந்தபட்சமாக 6069 க்கும் அதிகபட்சமாக 7699 க்கும் ஏலம் கோறப்பட்டது முடிவில் 52 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கு பருத்தி விற்கப்பட்டது திருச்சி விற்பனைக்குழு செயலாளர் சொர்ணபாரதி தலைமை வகித்தார் விற்பனை கூட கண்காணிப்பாளர் தங்கதுரை உரிம ஆய்வாளர் அன்புச்செல்வி மேற்பார்வையாளர் மோகனா மற்றும் வேளாண்மை விற்பனை துறை அலுவலர்கள் ஏலத்தை முன்னின்று நடத்தினர்.