குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

81பார்த்தது
குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
தமிழகத்தின் பல்வேறு பின் தங்கிய மாவட்டங்களில் இருந்து மாணவ - மாணவி கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர் இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த 21 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற 23 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பல்வேறு அரசு துறைகளில் அதிகாரிகளாக, ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்
தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கான பாராட்டு விழா என். ஆர். ஐ. ஏ. எஸ். அகாடமி அரங் கத்தில் நடைபெற்றது. இது இந்த கல்வி நிறுவனத்தில் நடைபெறும் 44வது வெற்றி விழா நிகழ்ச்சியாகும். விழாவுக்கு அகாடமி இயக்குனர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசும் போது, கால் பந்து வீரர் மெஸ்சிக்கு அதிர்ஷ்டம் இல்லாத வீரர் என்று சொல்வார்கள். ஆனால் போராடி உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அந்த கோப்பையுடன் நிம்மதியாக மெஸ்சி தூங்குகிறார். ஆகவே விடா முயற்சி தேவை. சிங்கம் புள்ளி மான், கருப்பு மான் இரை உண்ணி நினைக்கிறது. முதலில் புள்ளி மனையும், பிறகு கருப்பு மானையும் தின்ன நின்னக்கிறது. இரண்டும் ஓடி விடுகிறது. ஆகவே சிங்கம் புள்ளி மனை மட்டுமே குறி வைத்து துரத்தினால் மட்டு மே கிடைக்கும். அது மட்டு மல்ல எவ்வளவு தூரம் துரத்தினாலும் அதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடினால் மட்டுமே அதை பிடிக்க முடியும். அது போல எத்தனை வாய்ப்புகள் வந்தாலும் எந்த முடிவு எடுத்தாலும் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என பேசினார்

தொடர்புடைய செய்தி