ரசிதில் ரூ.30.. வாங்கியது ரூ.200.. உசிலம்பட்டியில் வசூல் வேட்டை

50பார்த்தது
ரசிதில் ரூ.30.. வாங்கியது ரூ.200.. உசிலம்பட்டியில் வசூல் வேட்டை
உசிலம்பட்டியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனைக்காக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வியாபாரிகளிடம் நகராட்சி பெயரில் ரூ.200 வரை தனிநபர்கள் பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர். ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட ரசிதில் ரூ.30 மட்டுமே உள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “வசூல் செய்ய ஒப்பந்தம் ஏதும் விடவில்லை” என்றனர். நகராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்படாத சூழலில் பணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி