அங்கன்வாடி பணியாளர் மாநில செயற்குழு கூட்டம்

62பார்த்தது
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகளான மருத்துவ காப்பீடு, அகவிலைப்படி, குறைந்தபட்ச ஓய்வூதியம் 6750 தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அங்கன்வாடி பணியாளர்களின் மாநில தலைவர் நாராயணன் பேசும்போது. ,


தொடர்ந்து எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை ஈடுபட்டு வருகிறோம் வரும் பிப்ரவரி மாதம் மூன்று நாட்கள் சென்னையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக அரசு மூன்று வருடங்களுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் ஏதும் தற்போது வரை நிறைவேற்றவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அங்கன்வாடி பணியாளர்களுக்கு நிறைய திட்டங்களை செய்துள்ளார் அதேபோல் குடியரசு தினத்தில் அறிவித்து அண்ணா பிறந்த நாளில் நிறைவேற்றி உள்ளார் இதே போல தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களும் வரும் குடியரசு தினத்தன்று எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் அதனை அண்ணா பிறந்தநாள் அன்று நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறினார்.

தொடர்புடைய செய்தி