பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து

58பார்த்தது
பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு செல்லும் அரசு பேருந்து கம்பரசம்பேட்டை - முருங்கபேட்டை இடையே உள்ள காளி கோயில் அருகில் எதிரில் வந்த ஆட்டோ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அங்கு ராஜ் (26) என்பவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோவில் பயணித்த அனைவரும் திருச்சி தில்லை நகர் வடவூர் பகுதி சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி