உணவகத்தில் வாடிக்கையாளரை தாக்கிய இருவர் கைது

58பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையம் மேல்புறம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு அலகரையை சேர்ந்த மதியழகன் மகன் பிரசாந்த் (24) என்பவர் தனது உறவினரான திருஈங்கோய்மலை பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சண்முகம் 22, இவரது உறவினரான பெட்டவாய்த்தலை, பழையூர் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் மணிகண்டன் ஆகியோருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார்கள். அப்போது அங்கு சாப்பிடுவதற்கு அமர்ந்த மூவரும் பரோட்டா கேட்டுள்ளார்கள் அதற்கு உணவக ஊழியர்கள் பார்சல் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்கள். இதில் வாடிக்கையாளருக்கும், உணவகத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் உணவக உரிமையாளர்களான
கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த செட்டிமுத்து மகன்கள் பாலசுப்பிரமணியன் (39) செந்தில்குமார் (40) மற்றும் ஊழியரான ஊரக்கரையைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் லோகநாதன் (34) ஆகியோருடன் சேர்ந்து மற்றும் சிலர் வாடிக்கையாளர்களான பிரசாந்த் மற்றும் அவருடன் வந்த உறவினர்களான சண்முகம், மணிகண்டன் ஆகியோரை கட்டையால் தாக்கியதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இத்தகராறில் உணவக உரிமையாளரான பாலசுப்பிரமணியனுக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி