சிலைப் பிள்ளையார் புதூரில் மீனவர் தற்கொலை

77பார்த்தது
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சிலை பிள்ளையார் புதூரை சேர்ந்தவர் பாலமுருகன் வயது 39. மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்துள்ளது. இந்நிலையில் அவர் சம்பவத்தன்று வயிற்று வலி காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். மயங்கி கிடந்தவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி