திருமுருகன் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

75பார்த்தது
முசிறி திருமுருகன் நகர் பகுதியில் ஆனந்த நகரில் பட்டப்பலகைகளில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி மாவட்டம் முசிறி அழகாபட்டி ரோடு திருமுருகன் நகர் பகுதியில் ஆனந்தன் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணவேணி வயது 45. இவரது கணவர் ஆனந்தராஜ் சென்னையில் பிளம்பராக வேலை செய்து வருகிறார். கிருஷ்ணவேணி காலையில் சுமார் பத்து மணி அளவில் தனது வீட்டை பூட்டி விட்டு சேருகுடியில் உள்ள தனது தாயார் கலாவதி வீட்டுக்கு சென்றுள்ளார். மாலையில் சுமார் 3 மணி அளவில் தனது வீட்டை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே உள்ள இரண்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த தாலிக்கொடி, ஆரம். , நெக்லஸ். மோதிரம். செயின் உள்ளிட்ட 25 பவுன் நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்து முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கைரேகை நிபுணர்களான உதவி ஆய்வாளர்கள் அகில் மற்றும் சுஜித் ஆகியோர் அடையாளங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் காவேரி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சம்பவம் குறித்து முசிறி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப் பகலில் திருடு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி