தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த அவலம்

83பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியை சேர்ந்த மான்போர்ட். இவர் நேற்று மாலை சொந்த அலுவல் காரணமாக திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த கார் மான்போர்ட் மீது மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி