நெடுஞ்சாலையில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

58பார்த்தது
நெடுஞ்சாலையில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவர் இன்று காலை சொந்த அலுவல் காரணமாக திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போது சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே கேரளா நோக்கி சென்ற கார் அதிவேகமாக வடிவேல் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து அறிந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வையம்பட்டி போலீசார் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அதனை தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி