ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்ணிடம் மோசடி

77பார்த்தது
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்ணிடம் மோசடி
சென்னையை சேர்ந்த பெண்ணிடம் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளது. அவருக்கு வந்த போன் அழைப்பில் இந்திய தூதரக அதிகாரி போல பேசிய ஒருவர், வெளிநாட்டில் படிக்கும் உங்கள் மகன் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதாக கூறியதோடு மகன் அழுவது போல ஏஐ ஆடியோவை அனுப்பி நம்ப வைத்து அவரை விடுவிக்க உதவுவதாக கூறி ரூ. 1.75 லட்சத்தை பெற்றார். பின்னர் மகனிடம் பேசிய போதே தான் ஏமாற்றப்பட்டதை அப்பெண் உணர்ந்தார்.

தொடர்புடைய செய்தி