திருச்சியில் வசமாக சிக்கிய திருடன்

59பார்த்தது
திருச்சியில் வசமாக சிக்கிய திருடன்
புதுக்கோட்டை மாவட்டம், செவல்பட்டியைச் சேர்ந்த இந்துமதி. இவரது தங்கை ஐஸ்வர்யா (24) இருவரும் இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு வந்து எலக்ட்ரானிக்ஸ் கடையில் எல்இடி டிவி வாங்கிக்கொண்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்துமதி வண்டியை ஓட்ட பின்னால் அமர்ந்து ஐஸ்வர்யா டிவியை பிடித்துக்கொண்டு சென்றுள்ளார். கோவில்பட்டி சாலையில் புதுக்காலணி என்ற இடத்தில் சென்றபோது இவர்களை பின்தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் முகத்தை மறைத்து துணியை கட்டிக்கொண்டு வந்த மர்ம நபர் ஒருவர் ஐஸ்வர்யா கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். அதில் அவர் விலகிக்கொள்ளவே செயினை பறிக்க முடியவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா சத்தம் போடவே பொதுமக்கள் மர்ம நபரை துரத்திச் சென்று சற்று தூரத்தில் வளைத்துப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த மணப்பாறை போலீசாரிடம் மர்ம நபரை மக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் விராலிமலையைச் சேர்ந்த தீபன்ராஜ் (26) என்பதும் திருச்சி, தீரன் நகர் அரசுப்போக்குவரத்து பணிமனையில் ஒப்பந்த பணியாளராக வேலைசெய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி