வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எம்பி சுற்றுப்பயணம்

66பார்த்தது
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எம்பி சுற்றுப்பயணம்
மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் கரூர் லோக்சபா தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2வது முறையாக எம்பியாக ஜோதிமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கு முன்னதாக தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சரும், திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்னம்பட்டி பேரூராட்சி துலுக்கம்பட்டி பகுதியில் நன்றி அறிவிப்பை துவக்கி வைத்த போது தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் மணப்பாறை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட்டது. உங்களது அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றப்படுமென அமைச்சர் பேசினார். இதனைத்தொடர்ந்து பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் திறந்த வேனில் சென்று நன்றி தெரிவித்தார். எம்பி. ஜோதிமணியிடம் பொதுமக்கள் 100நாள் வேலை, சாலை வசதி, சமுதாயக் கூடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்தனர். அப்போது மக்களிடம் ஜோதிமணி உடனடி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.
எம்பியுடன்‌ மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, முனானாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், திமுக மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், துவரங்குறிச்சி நகர செயலாளர் நாகராஜன், பேரூராட்சி தலைவர் சரண்யா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி