அரசு பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு

59பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரியை சேர்ந்த சின்னையா(66). இவர் நேற்று வளநாடு அருகே யாகபுரத்தில் மதுரை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சின்னையாவின் மகன் அளித்த புகாரின் பேரில், துவரங்குறிச்சி போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அரசு பேருந்து ஓட்டுனர் ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி