மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் பலி

60பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பெரிய ஆணைக்கரப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (74). இவர் நேற்று இரவு தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழனிசாமி மீது நெருப்பு பற்றி உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த வையம்பட்டி காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி