பக்ரீத் பெருநாளை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகை

72பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் இன்று காலை பக்ரீத் தியாகத் திருநாளை முன்னிட்டு புத்தாநத்தம் ஈத்கா மைதானத்தில் இமாம் அஹமத் ரிபாய் கான் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இச்சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மேலும், தொழுகைக்கு பிறகு ஊர்வலமாக கிழக்கு பள்ளிவாசல் வந்து மேற்கு பள்ளி வாசலில் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி