திருச்சி காட்டூர் பாப்பாகுறிச்சி பகுதியில் சேர்ந்தவர்கள் ராஜா கோகிலா தம்பதியினர் இவர்களுடைய 17 வயது மகள் துவாக்குடியில் உள்ள கல்லூரியில் டி எம் இ பயின்று வருகிறார். கடந்த மூன்றாம் தேதி அன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து தாய் கோகிலா திருவரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவி காணாமல் போன சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.