அல்லூரில், வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

50பார்த்தது
அல்லூரில், வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரும் இவரது மனைவி இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். மீண்டும் வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சுரேஷ் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிந்து வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி