தற்கொலை செய்து கொண்ட தாயின் வைரல் வீடியோ

4233பார்த்தது
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து புள்ளம்பாடி அண்ணா நகரில் வசித்து வந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுமித்ரா. இந்த தம்பதியினருக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகிவிட்டது. இவரது மகன் முருகானந்தம் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தாய் தந்தையரை வீட்டை காலி செய்யுமாறு குடிபோதையில் தகராறு கூறப்படுகிறது.

இதில் முருகானந்தத்தின் தாய், தந்தை மன உளைச்சலில் கடந்த 19ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதை அரைத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் இறந்து விட்டதாகவும் சுமித்ராவை மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி சுமித்ராவும் உயிரிழந்தார்.

இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், ரமேஷ், அவரது மனைவி சுமித்ரா இறப்பதற்கு முன்பு செல்போனில் வீடியோ பேசி விட்டு அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி