திருச்சி நவல்பட்டு பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி சம்பவம் நடந்த நேற்று அப்பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பொழுது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்த தீபன் சக்கரவர்த்திக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.