லால்குடி அருகே உள்ள திருமணமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் அழகர் (வயது 65); திருமணம் ஆகாதவர். இவர் தனியாக வசித்து வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் முறையாக அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி அன்று அவருக்கு திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமணமேடு கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அளித்த தகவலின் பேரில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.