தூத்துக்குடியில் திடீரென கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி!

570பார்த்தது
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இரண்டாவது நாளாக பிற்பகலில் பெய்து வரும் பலத்த மழை மாநகரில் பழைய பேருந்து நிலையம் சிவன் கோவில் பகுதி மட்டக்கடை நீதிமன்ற பகுதி, சிதம்பர நகர், பிரையன்ட்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாநகரில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் பரவலாக மழை பெய்தது இந்நிலையில் இன்று பிற்பகல் 1: 30 மணியிலிருந்து வானம் திடீரென மேகமூட்டமாகி சுமார் அரை மணி நேரமாக மாநகரின் பல்வேறு பகுதிகளான பழைய பேருந்து நிலையம் , மட்டக்கடை, பிரையன்ட் நகர் சிதம்பரம் நகர், கால்டுவெல் காலனி , மூன்றாவது மைல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

மேலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி