ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு!

53பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் இத்திட்டத்தின் மூலம் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு குழாய்கள் அமைக்கப்படாமல் சில வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இது பற்றி ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிடம் பலமுறை கேட்டும் மீதமுள்ள உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்று கூறுகின்றனர். இதனால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதன் காரணமாக இக்கிராம மக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ. 20க்கு விலைக்கு வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இத்திட்டத்தின் மூலம் கீழ வைப்பார் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ. 17 லட்சத்தை கீழவைப்பார் ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமலே விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் நிதி மோசடி செய்திருப்பதாகவும் கீழ வைப்பார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜேசுராஜா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி