பக்ரீத் பெருநாள்; ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

53பார்த்தது
தூத்துக்குடியில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு ஈத்கா தோட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அன்பு சகோதரத்துவம் வேண்டி சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு


இறைதூதர் இப்ராஹீம் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவது தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை ஆகும். ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஈத் கா தோட்டத்தில் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு அன்பு சகோதரத்துவம் உலக அமைதி வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில். ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மிராசா மரைக்காயர், துணைத்தலைவர் சிராஜுதீன், செயலாளர் எம் எஸ் எஃப் ரகுமான், பொருளாளர் மூஸா, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

தொழுகைக்குப் பின் ஒருவருக்கு ஒருவர் ஆறத் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று ஆடுகளை பலியிட்டு குருபானி வழங்கினர். ஆட்டுக்கறியை 3 பங்காக பிரித்து ஒன்று உறவினருக்கு ஒன்று ஏழைக்கு ஒன்று தனக்கு என மூன்று பிரித்து ஏழைகளுக்கு பங்கிட்டு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி