உப்பள தொழிலாளரிடம் கனிமொழிக்கு மேயர் வாக்கு சேகரிப்பு!

59பார்த்தது
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உப்பள தொழிலாளர்களிடம் திமுக அரசு மழைக்கால நிவாரணம் வழங்கியது உள்ளிட்ட சாதனைகளை எடுத்துக் கூறி கனிமொழி எம்பிக்கு ஆதரவாக மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக துணை பொதுச் செயலாளரும் திமுக வேட்பாளருமான கனிமொழி எம்பிக்கு ஆதரவு திரட்டும் வகையில் பொதுக்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்

இன்று காலை தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பெரியசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்களில் உப்பள பாத்திகளில் உட்பள பாத்திகளை தயார் செய்த பெண் தொழிலாளர்கள் மற்றும் உப்பு வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உப்பள தொழிலாளர்களிடம் திமுக அரசு உட்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூபாய் 5000 வழங்கியது மற்றும் நல வாரியங்கள் மூலம் உட்பள தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறி திமுகவிற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென சாதனை விளக்க மற்றும் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி