தேர்தல் பாதுகாப்பு குறித்து எஸ்பி ஆலோசனை!

70பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள் துணை ராணுவ படையினர் என 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாளை பேப்பர் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 1624 வாக்குச்சாவடிகளின் 286 வாக்கு சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது

இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 14 டிஎஸ்பிக்கள் 58 ஆய்வாளர்கள் 416 உதவி ஆய்வாளர்கள் எட்டு கம்பெனி துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 3500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்

பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாக்குப்பதிவை அமைதியாக எவ்வாறு நடத்துவது என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்

தொடர்புடைய செய்தி