திருச்செந்தூர் கோவிலுக்கு ₹ 70 லட்சம் காசு மாலை காணிக்கை

76பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ரூ. 70 லட்சம் மதிப்பிலான தங்க காசு மாலையை பக்தர் உபயமாக வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி பகுதியை சேர்ந்த போஸ்(67). இவர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவருக்கு ரூ. 70 லட்சம் மதிப்பிலான 108 பவுன் தங்க காசு மாலை உபயமாக வழங்கினர். இதில் லட்சுமி உருவம் பொறித்த 90 தங்க காசுகள் இருந்தது.
இந்த தங்க காசு மாலையை கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் வழங்கினார்.
18 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டிய நேர்த்தி கடனை தற்போது செலுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாதம்தோறும் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டு சென்ற பிறகு சிறுக சிறுக தங்கம் வாங்கி வைத்து இந்த காசு மாலையை தயார் செய்ததாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி