தட்டமை ரூபெல்லா தடுப்பூசி: ஆட்சியர் லட்சுமிபதி தகவல்

75பார்த்தது
தட்டமை ரூபெல்லா தடுப்பூசி: ஆட்சியர் லட்சுமிபதி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களை தடுக்கும் பொருட்டு 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஜனவரி 2ம்தேதி முதல் ஜனவரி 13. 1. 24 தேதிவரை செலுத்தப்படுகிறது.


இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள சுமார் 2. 90, 000 குழந்தைகள் பயன் அடைவார்கள். இத்தடுப்பூசி மாவட்டத்தில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு (டு. மு. பு முதல் 10ம் வகுப்புவரை) அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறுகிறது. பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கான்வாடி மையங்களில் நடைபெறுகிறது.





மாவட்ட கல்விதுறை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஊட்டசத்துதுறை, மற்றும் தழிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட அரசு துறைகள் மற்றும் IMA&IAP ஆகியோரின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தட்டமை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி  கேட்டுக்கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி