ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள்.

75பார்த்தது
தூத்துக்குடி ஐந்து நாட்களுக்குப் பின்பு 150 விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகு மீனவர்கள் இன்று அதிகாலை முதல் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றனர் விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

வங்க கடல் பகுதி மற்றும் மன்னார்வளைகுடா குமரி கடல் பகுதியில் பலத்த காற்று, சுழல் காற்று வீச கூடும் மேலும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்


இந்நிலையில் மீன்வளத்துறை தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளித்தை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி முதல் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன இதே போன்று ஏராளமான நாட்டுப்படகுகளும் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றன புத்தாண்டு இன்று முதல் கடலுக்கு செல்வதால் நல்ல மீன்கள் கிடைக்கும் என விசைப்படகு மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்

டேக்ஸ் :