பதட்டமான வாக்குச்சாவடி மையம்; எஸ்பி ஆய்வு

81பார்த்தது
பதட்டமான வாக்குச்சாவடி மையம்; எஸ்பி ஆய்வு
வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு.

வரும் 19. 04. 2024 அன்று நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 1624 வாக்குச்சாவடி மையங்களில் 286 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று (03. 04. 2024) நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ், சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கென்னடி, ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி