இரட்டைமலை சீனிவாசன் 79வது நினைவு தினம்

62பார்த்தது
இரட்டைமலை சீனிவாசன் 79வது நினைவு தினம்
தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசன் 79வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

பட்டியலின மக்களின் உயர்வுக்காக உலக அரங்கில் குரல் எழுப்பிய வரும், ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டப்பேரவையின் உறுப்பினராக 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ராவ் பகதூர் இரட்டை மலை சீனிவாசன் 79வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பாக நிறுவனத் தலைவர் புலி. செ. இளவரச பாண்டியன் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வில் அம்பேத்கர் அறக்கட்டளை தாமோதரன், ஆதிதிராவிடர் மகாசபை தலைவர் தர்மலிங்கம், பசுமைத்தாயகம் சுக்கு (எ) அந்தோணிசாமி மாரியப்பன், இந்திய குடியரசு கட்சி ரத்தினசாமி, சமத்துவ மக்கள் கழகம் நீலம் ஜே. பிரதீப் சூசைமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்டோ கணேசன், தமிழக வெற்றிக் கழகம் அஜீதா ஆக்னல், இந்து மக்கள் கட்சி வசந்தகுமார், லட்சிய திமுக சிம்பு கண்ணன், அரசு சுகாதார பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சரவணன், ஓபிஎஸ் அணி கலைத்தென்றல் முத்து, தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை பொறுப்பாளர்கள் புரட்சி வினோத், விக்கி வழக்கறிஞர் பிரசாத், மாடசாமி, உதயா, மைந்தன் கிங்ஸ்டன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி