வேலைவாய்ப்பு பெரும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்:

75பார்த்தது
வேலைவாய்ப்பு பெரும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்:
சாத்தான்குளம், பகுதியில் 25 ஆயிரம் பேர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வி. கணேசன் தெரிவித்தார். சாத்தான்குளம் பகுதியில் கனமழையால் சேதமான பகுதிகளில் அமைச்சா் சி. வி. கணேசன் ஆய்வு மேற்கொண்டாா். சுப்பராயபுரத்தில் உள்ள தடுப்பணையில் சேதமான பாலம், முதலூா் ஊராட்சிக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் அருகே சேதமான கருமேனி ஆற்றுப் பாலம் ஆகியவற்றை பாா்வையிட்டாா். அப்போது அங்குள்ள மக்கள் உயா் மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தினா்.   ஏற்பாடு செய்வதாக அமைச்சா் உறுதி அளித்தாா். பின்னா் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட ராமசாமிபுரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டாா். அப்போது அங்குள்ள மக்கள், கருமேனி ஆற்றுப்பாலம் அருகே பேருந்து நிறுத்தமும், சேதமான வீடுகளுக்கு நிவாரணமும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா். ஏற்பாடு செய்வதாக அமைச்சா் உறுதி அளித்தாா். அடுத்ததாக, வடக்கு பன்னபாறையில் சேதமான பகுதிகளை பாா்வையிட்டாா். அங்கு மக்கள் கோரிக்கையை ஏற்று, பன்னம்பாறை வழியாக அரசு பேருந்து இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமைச்சரே பேருந்தை ஓட்டி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து வடக்கு அமுதுண்ணாக்குடி சென்று அங்கு சேதமான தரைமட்ட பாலத்தை பாா்வையிட்டாா்.

தொடர்புடைய செய்தி