தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சங்கர ராமேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத மகா சனி பிரதோஷ விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது மகா சனி பிரதோஷம் அன்று சிவாலயம் சென்று வழிபட்டால் கஷ்டங்கள் தீர்ந்து நல்லது நடக்கும் என்பது ஐதீகம்
இதைத்தொடர்ந்து மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சங்கர ராமேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு பால் , தயிர் , சந்தனம், தேன் , பன்னீர், விபூதி உள்ளிட்ட 14 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதைத் தொடர்ந்து சுவாமி மற்றும் நந்தி பகவான் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது
முன்னதாக சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வீதி உலா நடைபெற்றது அப்போது வீதி உழாவில் வந்த பக்தர்கள் சிவாய நமக, சிவாய நமக என்ற பக்தி கோசத்தை முழங்கியபடி வீதி உலா சென்றனர் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டு சென்றனர்