அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கனிமொழி எம்பி ஆய்வு

51பார்த்தது
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கனிமொழி எம்பி ஆய்வு
கீழவல்லநாட்டில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாட்டில் உள்ள தூத்துக்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை கனிமொழி கருணாநிதி எம்பி, மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையில் இன்று (06. 07. 2024) பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ/மாணவியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: உங்களுக்கு எந்த துறை பிடித்திருக்கிறதோ அந்த துறையை தேர்ந்தெடுங்கள். அந்த துறைதான் உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களோடு வரப்போகிறது. பிடித்த துறையில்தான் நமக்கு பிடித்த விஷயத்தை மகிழ்ச்சியோடு செய்ய முடியும்.

மற்றவர்களை பார்த்து துறையை தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சி இருக்காது. அறிவே ஆற்றல் ஆகும். உலகத்தில் நிறைய அழகான விஷயங்கள் உள்ளன. அவை அத்தனையையும் உணரக்கூடிய மனிதர்கள்தான் முழுமை பெற்ற மனிதர்கள். நாம் இந்த உலகத்தை பாதுகாக்கக்கூடிவர்களாக, சாதி, மத பாகுபாடுகளில் இருந்து வெளியே வந்து அனைத்து மக்களையும் நேசிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி