பிஜேபி கட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்: கனிமொழி பேச்சு!

67பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதி நேற்று காலை குரும்பூரில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். பின்னர் நாலுமாவடி, இடையன்விளை ஆகிய கிராமங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்குகள் சேகரித்தார். மூக்குப்பீறியில் பிரச்சாரம் செய்து அவர் பேசுகையில், "மூக்குப்பீறியில் கனிமொழி கருணாநிதி பேசியதாவது: - வரவி ருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் தேர் தல். தமிழ்நாடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஒன்றிய அரசின்பிரதமர் மோடி தமிழ்நாட்டை வந்து பார்வையிடவும் இல்லை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணம் தரவும் இல்லை. என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி