வீட்டின் கதவை உடைத்து 38 பவுன் தங்க நகைகள் கொள்ளை!

60பார்த்தது
தூத்துக்குடி அய்யாசாமி காலனி சேர்ந்தவர் எஸ்தர் (52 ) இவருக்கு ஒரு மகள் உள்ளார். படித்துக் கொண்டிருக்கிறார், கணவர் அசரியர இறந்து விட்டதால் வெளிநாட்டில் வசிக்கும் தனது தங்கை கெஸ்த்தியின் பிள்ளைகளையும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் கோவையில் அவரது உறவினருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவைக்கு சென்று விட்டு இன்று எஸ்தர் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது அவர்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்
வீட்டிலிருந்த சுமார் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 38 பவுன் தங்க நகைகள் கொள்ளை போதனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி சிப்காட் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில்
எஸ்தர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்து தங்க நகைகளை அள்ளிச் சென்றது தெரியவந்தது.

வீடு புகுந்து திருடிய மர்ம நபர்கள் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

தொடர்புடைய செய்தி