தூத்துக்குடி முள்ளக்காடு காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் கணேஷ் குமார் (46). இவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். இவர் ரூ. 30 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டினாராம். ஆனால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லையாம். இதனால் வீட்டை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டதாம்.
இதனால் மனமுடைந்த கணேஷ் குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.