கேரளாவில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை

80பார்த்தது
கேரளாவில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை
மக்களவையில் கேரளாவில் இருந்து பாஜக இரட்டை இலக்க இடங்களைப் பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள போதிலும், பாஜக தலைமை 4 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது. குறைந்த வாக்குப்பதிவு காரணமாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகள் இரண்டும் பின்னடைவைச் சந்திக்கும் என்றும், இது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ்கோபி, திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஆற்றிங்கல் தொகுதியில் மத்திய அமைச்சர் வி.முரளிதரன், பத்தனம்திட்டாவில் அனில் ஆண்டனி ஆகியோர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் கேரள பாஜக உள்ளது.

தொடர்புடைய செய்தி