தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் குறித்து கனிமொழி எம்பி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் மற்றும் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வெள்ள பாதிப்புகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.