மண்வெட்டியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவர்:

1058பார்த்தது
மண்வெட்டியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவர்:
தூத்துக்குடியில் மண்வெட்டியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.  


தூத்துக்குடி முத்தையாபுரம் ஐயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் என்கிற புலிப்பாண்டி (58). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக அவரது மனைவி அவரைவிட்டு பிரிந்து குழந்தைகளுடன் கழுகுமலையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.  


அதன்பின்னர் செல்வம் அதே பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி (45) என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செல்வம் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். அதில் சில ஆடுகளை ராமலட்சுமி அவருக்கு தெரியாமல் விற்றுவிட்டாராம். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.


இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் வீட்டில் கிடந்த மண்வெட்டியால் ராமலட்சுமியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) அலெக்ஸ் ராஜ் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி