தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த முடிவு!

1072பார்த்தது
தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த முடிவு!
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டகளில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் தான் தீப்பெட்டி ஆலைகளில் பணியாற்றி வருகி;ன்றனர். இந்த தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

இதனால் பகுதி மற்றும் முழு இயந்திரம் என சுமார் 700 தீப்பெட்டி ஆலைகள் மூடப்படுவது மட்டுமின்றி, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும், நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில் இந்த தொழில் நலிந்து போவதற்கு ஒரு முறைபயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்கள் ஒரு காரணமாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகள் லைட்டர்கள ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தி, விறப்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக வாங்கி பொருள்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 10நாள்கள் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்

தொடர்புடைய செய்தி