சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு நிதியுதவி!

75பார்த்தது
சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு நிதியுதவி!
எட்டயபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள 108 வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 10ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, எட்டயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் சேதம் அடைந்துள்ள வீட்டின் உரிமையாளர்கள் 108 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அறிவித்துள்ள தலா ரூ. 10, 000 நிதியுதவியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் வழங்கினார்.

இந்நிகழ்வில் வட்டாட்சியர் மல்லிகா, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம். ஆர். முனியசாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி