செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

56பார்த்தது
செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
கோவில்பட்டி செண்பகவல்லி கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில்பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், திருவீதியுலாவும் நடைபெற்றன. 11ஆம் திருநாளான நேற்று திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் மண்டபத்தில் யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலில் இருந்து புறப்பட்டு அடைக்கலம் காத்தான் மண்டபம் வந்தடைந்தனா். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி, அம்பாள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பக் குளத்திற்கு வந்தடைந்தனா்.

தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தை 3 முறை சுற்றி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி