அகத்திய முனிவர் ஆலய மகா கும்பாபிஷேகம்

63பார்த்தது
மடப்புரம் கிராமத்தில் இருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அகத்திய முனிவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கீராளத்தூர் ஊராட்சி மடப்புரம் கிராமம் எழுந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு அகத்திய முனிவர் ஆலய முருகப்பெருமான் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலை 10: 30 மணி அளவில் நடைபெற்றது.
இந்த மகா கும்பாபிஷேக நிகழ்வில் மூன்று கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
யாகசாலை பூஜையில் உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டிய உலக பொதுமக்கள் முன்னோடின்றி வாழ வேண்டிய குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெறவேண்டியும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகசாலை நடைபெற்றது. யாகசாலை பூஜையில் இருந்து கடம் எடுத்துச் செல்லப்பட்ட புனித நீர் அகத்திய முனிவர் ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த கழகத்தில் ஊற்றப்பட்டது. மகா கும்பாபிஷேக நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அகத்திய முனிவர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி