நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்பு

81பார்த்தது
நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்பு
கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உலக புகழ் பெற்ற தேசிய நெல் திருவிழா திருத்துறைப்பூண்டியில் துவங்கி நடைபெற்று வருகிறது.


நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரால் கொண்டாடப்பட்ட தேசிய நெல் திருவிழா இன்று திருத்துறைப்பூண்டியின் மையப்பகுதியில் இருந்து தேசிய நெல் திருவிழா நடைபெறும் இடத்திற்கு கலை நிகழ்ச்சிகளுடன் நாட்டு காளை மாடுகளும் பாரம்பரிய நெல் ரகங்களும் மாட்டு வண்டியில் கோட்டை கட்டி எடுத்து பேரணியாக கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து இந்த நெல் திரு விழாவில் பல அரிய பாரம்பரிய வகை நெல் கண்காட்சியும் இயற்கை மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு கருத்தரங்கங்களும் நடைபெற உள்ள நிலையில் பாரம்பரிய நெல் கண்காட்சியை திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதன் பிறகு நம்மாழ்வார் நெல் ஜெயராமன் மற்றும் முன்னோடி உழவர்கள் படத்திறப்பு மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இயற்கை உழவர்களுக்கு ஆதரவாக நுகர்வோர்கள் உறுதியேற்பு நிகழ்ச்சியும் நம்மாழ்வார் விருது மற்றும் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நூல் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.
இன்று மாலை வரை கருத்தரங்கம் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி