விச்சூர் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்ல சாலை வேண்டும்

77பார்த்தது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் கீழவிடையல் ஊராட்சியில் உள்ள கிராமம் விச்சூர். இந்த கிராமத்தில் மனிதர்களின் இயற்கை மரணங்கள் திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தகனம் செய்வதற்கு கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செல்ல உரிய பாதை இல்லாமல் இந்த மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

விச்சூரிலிருந்து சுடுகாட்டிற்கு செல்ல பாதை கேட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் சாலை அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் தற்போது வரை சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தரவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் நேற்றைய தினம் விச்சூர் கிராமத்தில் முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவரது உடல் இன்றைய தினம் சுடுகாட்டிற்கு விளைநிலங்களுக்கு நடுவே வரப்பில் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. மழைக்காலம் தொடங்க
உள்ள நிலையில் சுடுகாட்டிற்கு செல்ல தார் சாலை வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி